உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்

Published On 2022-12-14 14:49 IST   |   Update On 2022-12-14 14:49:00 IST
  • பள்ளிக்கு சென்ற மாணவன் மாயமானார்
  • 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் நவீன்ஜனா (வயது 16 ). இவர், பாத்திமாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள மாஞ்சன்விடுதி அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற நவீன்ஜனா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்ற கேட்ட போது இன்று வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கம் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News