உள்ளூர் செய்திகள்

பள்ளி விழா

Published On 2023-03-25 14:00 IST   |   Update On 2023-03-25 14:00:00 IST
  • ஆலங்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் 56-வது ஆண்டு விழா
  • பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

ஆலங்குடி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பு னித அற்புத மாதா நடுநிலைப் பள்ளியின் 56வது ஆண்டு விழா பள் ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அரசு அதிகாரிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் ஆர்கே அடிகளா ர் மற்றும் அருட்தந்தை கித்தேரிமுத்து ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.பள்ளியின் தலைமையாசிரியர் சூசைராஜ் நடப்பாண்டிற்கான ஆண் டறிக்கை வாசித்து தலைமை ஏற்றார்.பள்ளி ஆண்டு விழாவிற்கு சிற ப்பு விருந்தினராக வருகை தந்த புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் ஆண்டறிக்கை மற்றும் கட்டுரை,ஓவியம் பாடல் ஆடல் மற்றும் விளையாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெ ற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசுகளை வழங்கினார்.ஆண்டு விழாவில் பள்ளியில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது.ஆண்டு விழாவில் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் கருணாகரன் கவிதா தனராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாண வ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியைகள் அலு வலக பணியாளர்கள் முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் விழாவில் க லந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் ஜோசப் அ னைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News