உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் கள்ள துப்பாக்கி விற்பனை

Published On 2023-08-16 13:26 IST   |   Update On 2023-08-16 13:26:00 IST
  • ஆலங்குடி அருகே கள்ள துப்பாக்கி விற்பனை செய்த உத்தரப்பிரதேச இளைஞர்
  • பெண்மீது தாக்குதல் தொடுக்க விற்பனை செய்த இளைஞர் கைது

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர்கள் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர்.கவிதாவின் அக்கா கணவர் பாலசேகர் (50).இவர் திருச்சி ஏர்போர்ட் அவனியா நகரில் வசித்து வருகிறார்.இதற்கிடையே கவிதா தனது அக்கா கணவரிடம் பணம் கடனாக பெற்றார். அதனை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த பாலசேகர் கடந்த 9-ம் தேதி கருக்கா குறிச்சி தெற்கு தெருவுக்கு அடியாட்களுடன் சென்று கவிதாவின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் தொடுத்தார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கவிதா காயம் இன்றி தப்பினார்.இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசேகரை கைது செய்து அவரிடமிருந்து உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை கைப்பற்றினர்.அதன் பின்னர் அந்த கள்ள துப்பாக்கி தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் புலன் விசாரணை நடத்தினார். அதில் பால சேகருக்கு உத்தர பிரதேச மாநிலம் பாந்தாம் மாவட்டம் திருப்பாதி சதா கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் குமார் (34 )என்பவர் துப்பாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.இதை யடுத்து கும்பகோணத்தில் தற்போது வசித்து வந்த நித்திஷ் குமாரை வடகாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News