உள்ளூர் செய்திகள்

உயர்பலி வாங்க துடிக்கும் மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-03-25 14:21 IST   |   Update On 2023-03-25 14:21:00 IST
  • எந்நேரமும் விழக்கூடிய அபாயத்தில் சாய்ந்து நிற்கும் மின் கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
  • அகற்ற போரி பொதுமக்கள் வேண்டுகோள்

அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையா ர்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் பில்லு வலசை, காசாங்குடி, ஏந்தல் உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கண்மாய் தண்ணீரை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆவுடையார்கோவிலி ருந்து மீமிசல் வரைஉயர் மின்னழுத்த மின் கம்ப க்காக, நடப்பட்டுள்ள மின் கம்பங்களில், 8 உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, சாய்ந்த நிலையில் எந்த நேரத்தில் விழுமோ என்ற அபாய கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. உயிர் அழுத்த மின் கம்பம் சாய்ந்தால், தண்ணீர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பல உயிர்கள் காவு வாங்கி விடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவேஅசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்குள் உடனடியாக மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், அல்லது கண்மாய் வழி யாக செல்லக்கூடியமின்க ம்பங்களை அகற்றி,பாப்ப னேந்தல் வழியாக செல்ல க்கூடியஉயர் மின்னழுத்த மின்கம்பங்க ளிலிருந்து மின்பாதை அமைத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News