- புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்
- பொதுமக்களிடம் இருந்து 284 மனுக்கள் பெறப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 284 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500 வீதம் ரூ.1,35,000 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளை, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி ஆகியோர் வழங்கினார்கள்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.