உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-04-18 13:06 IST   |   Update On 2023-04-18 13:06:00 IST
  • கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது
  • 361 மனுக்கள் பெற்றப்பட்டது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.இம்மனுக்களை பெற்றுக்கொண்டு அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கை, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்கள் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.2,40,000 மதிப்புடைய மோட்டார் பொருந்திய தையல் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செ.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News