உள்ளூர் செய்திகள்

வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2022-10-21 13:48 IST   |   Update On 2022-10-21 13:48:00 IST
  • வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
  • தீபாவளி பண்டிகையைெயாட்டி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் வாராவாரம் வியாழன் தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாகும்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதை ஒட்டி நேற்று ஆலங்குடி சந்தை கூடியது. அதன்படி சந்தையில் காய்கறிகள், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும கோழி உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் முண்டி அடித்தனர்.

தீபாவளிப் பலகாரங்களுக்குத் தேவையான மாவு, மளிகைப் பொரு ட்கள் காய்கறிகள் என அனைத்து பொருட்களும் அமோகமாக விற்ப னை ஆனதால் வியாபாரிகளும் உற்சாகத்துடன் வியாபாரம் செய்தனர்.

மாலை வேலையில் சாரல் மழை வந்ததால் வியாபாரம் சற்று மந்த மாகி இருந்தாலும், இந்த வாரம் ஆலங்குடி சந்தையில் கடுமையான வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக் கின்றனர்.

Tags:    

Similar News