உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

Published On 2022-07-06 08:20 GMT   |   Update On 2022-07-06 08:20 GMT
  • புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
  • அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் இயக்குனர் அறிவுருத்துதலின்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ராமலிங்கம், உத்தமன் உள்ளிட்ட குழுவினர்கள் பொன்னமராவதியில் பேரூந்து நிலைய வளாகம், அண்ணாசாலை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, தேனீர் கடை, மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்க்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கூலிப் என்ற புகையிலை பொட்டலத்தை பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவற்பறை ள்ளி மாணவர்களுக்கு விற்கக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகா தாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்

Tags:    

Similar News