உள்ளூர் செய்திகள்
- வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
- பேருந்தை முந்த முயன்ற போது விபத்து
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வக்குகோட்டை அருகே உள்ள குப்பையன் பட்டியைச் சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 51). இவர் தனது உறவினரான தாமரை–செல்வத்துடன் இருசக்கர வாகனத்தில் சோத்துப்பாளைக்கு சென்று விட்டு குப்பையன் பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச் செல்லும் போது இருசக்கர வாகனம் பஸ் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட 2பேரும் உயிருக்கு போராடி–க்கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த மார்கண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.