உள்ளூர் செய்திகள்
- விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
- மன விரக்தியில் செய்து கொண்டார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கீழாத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் அண்ணாத்துரை (வயது 52) . இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது.
சம்பவத்தன்று வலி அதிகமாக இருக்கவே, மன விரக்தியில் வீட்டில் இருந்து பினாயிலை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.