அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம்
- அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
- 13 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் முன்னிலை வகித்தார். அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர். அதற்கு துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் சார்பில் உரிய தீர்வு எட்டப்படும் என பதிலளிக்கப்பட்டது.மேலும் நகராட்சி பகுதியில் நடைபெற்ற, நடைபெற இருக்கின்ற வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து 13 பணிகள் மீது விவாதம் நடைபெற்று 13 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எதிர் வருகின்ற 8-ந் தேதி வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.