உள்ளூர் செய்திகள்

புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-11-25 14:50 IST   |   Update On 2022-11-25 14:50:00 IST
  • புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பழுதான பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி ஊராட்சி பேயாடிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை காரணமாக அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை மற்றும் பக் கவாட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுகின்றன.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் குழந்தைகளை அங்கன்வாடி மை யத்திற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். மேலும் தற்காலிகமாக மாற்று இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

அங்கன்வாடியில் 30 குழந்தைகள் பயின்று வரும் நிலையில் மாற்று கட்டிடத்தில் போதிய இட வசதி கழிப்பறை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடி நட வடிக்கை மேற்கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைந்து தரு மாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News