உள்ளூர் செய்திகள்

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

Published On 2022-09-02 08:17 GMT   |   Update On 2022-09-02 08:17 GMT
  • தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுவருகிறது
  • கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை,:

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News