பேரூராண்டார் கோவிலில் நாமபுரீஸ்வரர் - தர்மஸம்வர்த்தினி திருக்கல்யாண வைபவம்
- ஈசன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டினார்
- ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழா நேற்றைய முன் தினம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேரோடும் வீதியில் பட்டனப் பிரவேசமும், பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.இதையடுத்து, ஈசன் நாமபுரீஸ்வரருக்கும், அம்பாள் தர்மஸம்வர்த்தினிக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.சந்தன காப்பு அலங்காரத்தில் ஈசன் காட்சியளித்தார். சிவனடியார்களால் திருவாசகம், முற்றோதுதல் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிய ரச தேரில் திருமண மேடை அமைக்கப்பட்டது. இதில், உற்சவ மூர்த்திகளான ஈசன், அம்பாள் திருவுருவங்கள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவன் கோவில் அருகே உள்ள நாடியம்மாள் கோவிலிருந்து திருமாங்கலியம், பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்ற சீர்வரிசைகளோடு மேள தாளம் முழங்க மணமேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஈசன்- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் ெ சய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. சிவச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். பல சடங்குகளுக்கு பின் புதிய திருமாங்கல்யம் கொண்டு ஈசன்- அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியர் குழுவினர் தெய்வானை திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.