உள்ளூர் செய்திகள்

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-07-11 11:55 IST   |   Update On 2023-07-11 11:55:00 IST
  • புதுக்கோட்டையில் காய்கறி வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சேங்கைதோப்பு பகுதியை சோ்ந்தவர் சுகுமாறன் (வயது 50). இவர் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலை செய்த சுகுமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News