உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் நில கையப்படுத்துவது குறித்த கூட்டம்

Published On 2023-04-22 14:20 IST   |   Update On 2023-04-22 14:20:00 IST
  • புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் நில கையப்படுத்துவது குறித்த கூட்டம் நடைபெற்றது
  • மாவட்ட தனிநபர் பேச்சுவார்த்தை குழு (பத்தாம் கட்டம்) கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை, ஏப். 22-

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவேரி-வைகை -குண்டாறு இணைப்பு க்கால்வாய் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்படவுள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்த அமைக்கப்பட்ட மாவட்ட தனிநபர் பேச்சுவார்த்தை குழு (பத்தாம் கட்டம்) கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

காவேரி- வைகை- குண்டாறு இணைப்பு க்கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர், மண்டையூர், செட்டிபட்டி, பூங்குடி, சீமானூர், வாலியம்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆகிய 8 கிராமங்களில் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்படவுள்ள 92 பட்டா தாரர்களின் 91 புலஎண்களில் மொத்த கையக பரப்பு 11.71.23 ஹெக்டேர் நிலத்திற்கு மற்றும் மரங்கள், கட்டிட ங்கள், கிணறுகள் நில உரிமை யாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக, மாவட்ட அளவிலான தனிநபர் பேச்சுவார்த்தை குழு கூட்டம் (பத்தாம் கட்டம்) மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

மேலும் காவேரி-வைகை- குண்டாறு இணைப்புக்கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்ம ந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News