உள்ளூர் செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டை தேரோட்டம்
- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டை தேரோட்டம் நடந்தது
- முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரட்டைத் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 27-ந்தேதி காப்புக் கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரட்டை தேரோட்ட விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின் ஒரு தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றொரு தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளிய பின் பக்தர்கள் வடம் பிடிக்க முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினர் செய்திருந்தனர்.