உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

Published On 2023-02-02 06:58 GMT   |   Update On 2023-02-02 06:58 GMT
  • முதலுதவி பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது
  • பேரூராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் முதலுதவி செயல் விளக்கம் குறித்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில், அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை, ஈ.சி.ஜி., எக்ஸ்ரே, முழு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கு ரத்த கொதிப்பு, 3 பேருக்கு சர்க்கரை நோய், 15 பேருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சையும், ஆரோக்கியம் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கப்பட்டது. 10 பேர் எக்கோ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தொடர்ந்து முதலுதவி பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஆரோக்கிய நல குறிப்பேடு வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News