உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் மாரத்தான் போட்டி

Published On 2023-04-09 06:29 GMT   |   Update On 2023-04-09 06:31 GMT
  • கந்தர்வகோட்டையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
  • போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாவட்ட அயலக அணி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் பாலகுமார், சுரேஷ் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News