உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
- போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வம்பன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வம்பன் காலனியை சேர்ந்த சுதாகர் (வயது 40) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு, இரண்டு மொபைல் மற்றும் ரூ.1860 இவைகளை பறிமுதல் செய்து அவரை ஆலங்குடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.