உள்ளூர் செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

Published On 2023-02-03 05:30 GMT   |   Update On 2023-02-03 05:30 GMT
  • சிறுமி பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
  • ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்

புதுக்கோட்டை

அறந்தாங்கி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 48), தொழிலாளியான இவர், 5 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடடார். மேலும் இந்த அபராத் தொகை மற்றும் அரசு சார்பில் 2.5 லட்சத்தை சிறுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் உத்தவில் குறுப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News