உள்ளூர் செய்திகள்
சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
- சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
- சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டி சிவபுரம் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கணபதிஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அமாவாசை சிறப்பு யாகபூஜைகள் சிவசித்தர் முன்னிலையில் நடைபெற்றது.தொடர்ந்து பகவதி அம்மன், மூகாம்பிரை சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் க.ராமர் செய்திருந்தார்.