உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-06-29 14:00 IST   |   Update On 2023-06-29 14:00:00 IST
  • கந்தர்வகோட்டை அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
  • கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கணபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலை அமைத்து கடந்த 3 நாட்களாக நான்கு கால யாக பூஜைகள் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்

Tags:    

Similar News