உள்ளூர் செய்திகள்
பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா
- பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- அன்னதானமும் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தில் பட்டவன் சுவாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அந்த கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கணபதி ஓமம் லட்சுமி ஓமம் நவ கிரக ஓமம் பின்னர் யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான விழா நடைபெற்றது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.