உள்ளூர் செய்திகள்

மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏற்று கொள்ள தயார் - கார்த்தி சிதம்பரம்

Published On 2023-03-20 07:53 GMT   |   Update On 2023-03-20 07:53 GMT
  • ரஜினி கட்சி ஆரம்பிக்காததால், அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்
  • சசிகலா தைரியமானவர் என்று நான் கூறியதை வாபஸ் வாங்கி கொள்கிறேன்

ஆலங்குடி,

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாடா குழுமத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உப கரணங்களை வழங்கி எம்பி கார்த்திக் சிதம்பரம், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,பிளஸ் டூ மற்றும் பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது. இது குறித்த உண்மை தன்மையை அறிய அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் சேரவில்லை. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்படாததால் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்மாநிலத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்குமத்திய தேர்வு ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி நீதிமன்றத்தி ன் மூலமாக இதற்கு தீர்வு காணலாம் என்று தமிழக அரசு நம்புகிறதுசசிகலா தைரியமானவர் என்று நான் கூறி இருந்தேன் ஆனால் அதை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் அவர் தைரிய மாக அரசியலுக்கு வரவில்லை அதிமுக விவகாரத்தில் எடப்பாடி கையில் அனைத்து வந்துவிட்டது இரட்டை இலையை நான் குறைத்து மதிப்பிடவில்லைஅதிமுகவிற்கு என்று வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆனால் அதிமுக, பாஜகவோடு இருக்கும் வரை தொடர்ந்து மக்கள் இரண்டு கட்சிகளுமே புறக்கணித்து கொண்டே தான் இருப்பார்கள்தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளை அச்சு றுத்துவதற்கும் பயமுறுத்துவதற்கும் தான் தற்போது பயன்படுத்தப்ப ட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News