உள்ளூர் செய்திகள்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை

Published On 2023-10-21 12:15 IST   |   Update On 2023-10-21 12:15:00 IST
  • கந்தர்வகோட்டை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
  • கந்தர்வு கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை அடுத்த காடவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. விவசாயி. இவரது சண்முக தேவி (வயது 45).இவர்கள் நேற்று காலை விவசாய பணிகளை கவனிப்பதற்காக வயலுக்குச் சென்று விட்டனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாதததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பட்டப்பகலிலேயே கைவரிசை காட்டியுள்ளனர்.இது தொடர்பாக சண்முகதேவி கொடுத்த புகாரியின் பேரில் கந்தர்வு கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News