உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2023-02-09 12:53 IST   |   Update On 2023-02-09 12:53:00 IST
  • கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
  • விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்ப விடுதி ஊராட்சியில் உள்ள சொக்கம்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.விடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. சின்னதுரை சொக்கம்பேட்டை பட்டவன் கோவில் திடலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனும்மான முத்துகிருஷ்ணன், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஜினி இளங்கோவன், சங்கன் விடுதி தங்கராசு, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News