உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2022-12-26 14:09 IST   |   Update On 2022-12-26 14:09:00 IST
  • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
  • இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அம்புகோவில் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அன்பு கோவில் ஊராட்சி மன்றம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமை அம்பு கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமை துவக்கி வைத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் இந்த மழை காலங்களில் மக்கள் எவ்வாறு உடல் நலத்தை காக்க வேண்டும் என்றும் அதேபோல் பகுதியில் கண்புறை நோய் மற்றும் கண் சம்பந்தமான வியாதிகளுக்கு இது மாதிரியாக நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முகாமில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருந்து மாத்திரைகள், சொட்டு மருந்து மற்றும் கண்புரை நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச லென்ஸும் வழங்கப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News