உள்ளூர் செய்திகள்

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-05 12:10 IST   |   Update On 2022-07-05 12:10:00 IST
  • தூக்குப்போட்டு பெண் தற்கொலை கொண்டார்.
  • வேலை பார்த்து வந்தார்.

புதுக்கோட்டை:

ஆவுடையார்கோவில் தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 60). இவரது மூன்றாவது மகள் ரஞ்சனா (25). இவர் பி.எஸ்.சி., பி.எட் படித்துவிட்டு ஆவுடையார்கோவிலில் ஜெராக்ஸ் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக, வேலை பார்த்து வந்தார். வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்த போது ரஞ்சனா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர்கள் ரஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சனாவிற்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது."

Tags:    

Similar News