உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-11-25 05:12 GMT   |   Update On 2023-11-25 05:12 GMT
  • புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
  • கலெக்டர் மெர்சி ரம்யா விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்து கூறினர். கூட்ட முடிவில் கலெக்டர் பேசும்போது, விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, வேளாண் இணை இயக்குனநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News