உள்ளூர் செய்திகள்
- வாகனம் மோதி முதியவர் பலியானார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
கீரனூரில் 70 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் புறவழிச்சாலை வழியாக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களமாவூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.