உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2023-04-07 13:12 IST   |   Update On 2023-04-07 13:12:00 IST
  • விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கையன் (வயது 86), விவசாயி. இவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. வயது முதிர்வின் காரணமாக நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கையன் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


Tags:    

Similar News