உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் டிரைவர் பலி

Published On 2022-06-06 14:50 IST   |   Update On 2022-06-06 14:50:00 IST
  • வாகன விபத்தில் டிரைவர் பலியானார்
  • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம்கீரமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல் (வயது 48). டிரைவரான இவர் சம்பவத்தன்று பனங்குளத்திற்கு மரம் வெட்டுவதற்காக அதற்கான எந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது,

எதிரே மதுரையிலிருந்து வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சித்திரவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம் புலன்ஸ் உதவியுடன் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்ன்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி யில் சேர்க்கப் பட்ட சித்திரவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் வேன் ஓட்டுநர் இளங்கோவை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News