உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் திருட்டு

Published On 2022-09-06 11:53 IST   |   Update On 2022-09-06 11:53:00 IST
  • வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  • மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பட்டமரத்தான் நகர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 75). இவரது மனைவி தெய்வானை. இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் சங்கர் (32) திருமணமாகி லண்டனிலும், மகள் உமா காஞ்சிபுரத்திலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காசிநாதன் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இன்று காலை அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன் பக்க கதவு மட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த 2 பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர் ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காசிநாதன் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News