உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம்

Published On 2023-10-21 12:20 IST   |   Update On 2023-10-21 12:20:00 IST
  • அறந்தாங்கி அருகே தே.மு.தி.க. பொதுக்கூட்டம்
  • பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது

அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற கட்சியின் 19-வது ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், சனாதன கொள்கையை 40 ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு அடிகளார் கொண்டு வந்துள்ளார். அவர் மறைவிற்கு செல்ல முடியாததால் பொதுக்கூட்ட மேடையிலே பொதுமக்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். சென்னை சென்றவுடன் மேல்மருவத்தூருக்கு சென்று உறவினர்களிடம் ஆறுதல் கூற உள்ளதாக கூறினார்மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு தனி பெருமை உண்டு. அதிக அளவில் ராணுவத்தில் சேருவது இங்கு உள்ள இளைஞர்கள் தான் இந்தப் பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே புகழ் சேர்க்கும் மாவட்டமாக விளங்கி வருவதால் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று புகழாரம் சூடினார்.பின்பு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு சந்தன மாலை அணிவித்து கையில் வீர வேல் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News