உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-25 15:00 IST   |   Update On 2023-08-25 15:00:00 IST
  • கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவரும், மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News