பள்ளி நேரங்களில் நகரப் பேருந்துகளை அதிகரிக்க கோரிக்கை
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்கள் மாநாடு
- பள்ளி நேரங்களில் நகரப் பேருந்துகளை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இளம்பெண்கள் மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சுமதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், செயலாளர் ஏ.குமாரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய உபகுழுவை அறிமுகப்படுத்தி மாநில பொருளாளர் பாரதி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளராக சிவஸ்ரீ, துணை அமைப்பாளராக முத்துலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மகாலெட்சுமி வரவேற்க, சிவஸ்ரீ நன்றி கூறினார்.பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகரப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.