உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே நடைபெற்ற எல்கை பந்தயத்தில் சீறிபாய்ந்த மாடுகள், குதிரைகள்

Published On 2023-05-11 12:59 IST   |   Update On 2023-05-11 12:59:00 IST
  • அறந்தாங்கி அருகே நடைபெற்ற எல்கை பந்தயத்தில் மாடுகள், குதிரைகள் சீறிபாய்ந்தன
  • சிறந்த சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

அறந்தாங்கி:

அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூமாரியம்மன் கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.26-வது ஆண்டாக நடைபெற்ற இந்த பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.4 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 6 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், தேன்சிட்டு மாடு பிரிவில் 52 ஜோடிமாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 18 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை ரெத்தினக்கோட்டை கிராமத்தார்கள், இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Tags:    

Similar News