உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்
- 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபணியை மேற்கொண்டனர்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லா கோட்டையில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.
முகாமில் புதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ அலுவலர் பாலாஜி,
சுகுமாரன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபணியை மேற்கொண்டனர்.