அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து புதுக்கோட்டை அனைத்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்
- அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து புதுக்கோட்டை அனைத்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரின் தலைமையிலான கலந்தாய்வு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, வருவாய்த்துறை சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, ஊரக வேலை உறுதித் திட்டம், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும், நமக்கு நாமே திட்டம், பாதாள சாக்கடை, குடிநீர் வழங்கும் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், சிறார் கண்ணொளித் திட்டம், புதுமைப் பெண் திட்டம், குழந்தை திருமணங்கள் தடுப்பு, காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளின் கட்டமைப்பு, முதல்வரின் முகவரித் திட்டம், நான் முதல்வன் திட்டம், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பேருந்து பயணங்கள் குறித்து காந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றி யக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.