உள்ளூர் செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது
- காவல் நிலைய வளாகத்தில் நடந்தது
புதுக்கோட்டை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலங்கு டி காவல் சரகர் துணை சூப்பிரண்டு போலீஸ் தீபக்ரஜினி தலைமையில், ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டம் ஆய்வாளர் அழகம்மை முன்னிலையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒதுக்கப்பட்ட வழியாகத்தான் நடைபெற வேண்டும். புதிய பாதையில் செல்ல கூடாது. ஆலங்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனைத்து மக்களும் நல்லிணக்க அடிப்படையில் உதவிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.