உள்ளூர் செய்திகள்

எலிமருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2022-06-25 07:03 GMT   |   Update On 2022-06-25 07:03 GMT
  • எலிமருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இலைகடிவிடுதி நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 22). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் மகாலட்சுமி நேற்று எலிமருந்தை (விஷம்) சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்இ தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மகாலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News