உள்ளூர் செய்திகள்
- கல்லூரி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள வம்பன் மாஞ்சன்விடுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகள் நந்தினி (வயது 19). இவர் புதுக்கோட்டையில் ஒரு கல் லூரியில் பிஎஸ்சி கணிதவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், கருப்பையா ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி பெண்ணை தேடி வருகிறார்.