பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
- மாணவர் கோபி மற்றும் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் உள்ளிட்ட ஆசிரியர்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி வாழ்த்தினார்
- பிளஸ்2 பொதுத்தேர்வில் 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர் கோபியையும், பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பத்தின் கல்விப்பணியையும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி பூங்கொத்து வழங்கினார்.
புதுக்கோட்டை:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் (மாநில அளவில் இரண்டாமிடம்) பெற்ற பொன்னமராவதி அமல அண்ணை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் கோபி மற்றும் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் உள்ளிட்ட ஆசிரியர்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி வாழ்த்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர் கோபியையும், பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பத்தின் கல்விப்பணியையும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி பூங்கொத்து வழங்கினார்.
இதில் மாணவர் கோபியின் தாயார் அன்பழகி, மற்றும் ஆசிரியர்கள் ஆர்.பிரின்ஸ்,செ.பாலமுரளி, கு.சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 % தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .