முதல்-அமைச்சர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
- அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு
- சிறப்பு அழைப்பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திரு வரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் கழக சார்பில் ஆலங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் செல் வம் அனைவரையும் வரவேற்றார் . திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கேபிகேடி தங்கமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சிறப்பு அழைப்பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது,அழியாநிலையில் 40 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலங்குடியில் 15 கோடி மதிப்பீட்டில் செட்டிகுளம், கல்லுக்குண்டு கரை குளம், தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புறவழிச்சாலைக்கு 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த புறவழிச்சாலை பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் ரகுபதி பேசும் போது,ஆன்லைன் சூதாட்டத்தால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடும்பங்களை சீரழித்து வரும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா வை சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு தி.மு.க.வை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்.கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஞான இளங்கோவன், மு ன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம், தி ஒன்றிய குழு பெருந்தலைவர் வள்ளியம்மை, பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், கீரமங்கலம் பேரூராட்சி சிவக்குமார், ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள், நகரத்துணை செயலாளர் செங்கோல், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கல ந்துகொண்டனர். நகரச்செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.