சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்.
புதுக்கோட்டை:
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தினை, கலெக்டர் கவிதா ராமு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவு ள்ளதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்க விடுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஓட்டமானது, மாவட்ட ஆட்சியரக ரவுண்டானா, நகராட்சி அலுவலகம், அண்ணாசிலை, பழைய பேருந்துநிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக விளை யாட்டரங்கத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தின் பொழுது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனை த்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள ஒட்டு வில்லைகளை பார்வையிட்ட கலெக்டர், மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடிய சதுரங்க விளையாட்டினையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கலெக்டர் கவிதா ராமு, மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடிய சதுரங்க போட்டிகளை பார்வையிட்டார்.