உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்
- அறந்தாங்கி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கள்ளனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம், விழாவினையொட்டி திருத்தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு கடந்த 22-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
முன்பாக திருத்தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.