உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-09-08 06:40 GMT   |   Update On 2022-09-08 06:40 GMT
  • அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக நடந்தது

புதுக்கோட்டை:

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே ஏம்பல் சாலையில் உள்ள கரைமேல் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இந்த குதிரை எடுப்பு விழாவையொட்டி பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடத்திய விழா கமிட்டியை சேர்ந்த 5 பேர் மீது கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News