உள்ளூர் செய்திகள்

முந்திரி காட்டில் தூக்கில் வாலிபர் பிணம்

Published On 2023-07-03 10:26 IST   |   Update On 2023-07-03 10:26:00 IST
  • முந்திரி காட்டில் தூக்கிட்ட நிலையில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
  • கொலையா போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முந்திரிக்காட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் கந்தர்வகோட்டை போலீசிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி சப்இஸ்பெக்டர் முத்துகுமர் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் கொத்தம்பட்டியில் உள்ள தனியார் கோழிபண்ணைக்கு புதிதாக செட் அமைக்கும் பணிக்கு வந்த, கரூர் மாவட்டம குளித்தலை பகுதியை சேர்ந்த பொன்னர் மகன் முருகாந்தம் (வயது 35) என்பது ெதரிய வந்தது. பணி ெசய்வதற்காக வந்த இவர் எதற்காக முந்திரி காட்டில் எதற்காக தூக்கிட்டு கொண்டார். யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News