உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு

Published On 2023-04-15 07:13 GMT   |   Update On 2023-04-15 07:22 GMT
  • 19 பேர் காயம் அடைந்தனர்
  • பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.19 பேர் காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News